ஜனாதிபதி கோட்டா இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்றிரவு (செவ்வாய்கிழமை) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் ஜெனரல் மொஹான் சமரநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதால், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.