டயான கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயான கமகேவின், நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துசெய்யக்கோரி தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) குறித்த கடிதத்தினை அனுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்ததால் டயானா கமகேவை கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.