டுபாயில் பொது இடங்களில் தங்கி, யாசகம் பெறும் நிலைமைக்குள்ளான இலங்கையர்கள்!

0

டுபாயின் அல் ஹுதைபா பூங்காவில் வாழ்க்கை நடத்திய 20 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு சமூக சேவையாளர்களின் உதவியுடன் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.

சமூக சேவையாளர்கள், இலங்கை நலச் சங்கம்- சஹானா மற்றும் துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகிய தரப்புக்கள், வருகை விசாக்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு வந்து, சிக்கித் தவிக்கும் இலங்கையர்களிற்கு உதவ முன்வந்துள்ளது.

அவர்கள் அனைவரும் வருகை விசாக்களில் வந்ததால் டுபாயில் வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதர் நலிந்த விஜேரத்ன தெரிவித்தார். அவர்களிற்கு உதவுவதில் தூதரகம் முனைப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

வீடற்றவர்கள் அனைவரும் தங்குமிடங்களிற்கு மாற்றப்படுவார்கள் என்று நலன்புரி குழுக்கள் உறுதிப்படுத்தின. “இங்குள்ள இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பி செல்ல டிக்கெட் வாங்கவோ, தனிமைப்படுத்தலுக்கு பணம் செலுத்தவோ வசதியற்றவர்கள். குளிப்பதற்கும் இடமில்லை. வீதியால் து செல்வோர் கொடுக்கும் உணவில் நாங்கள் வாழ்கிறோம், ”என்று சிக்கித் தவித்த இலங்கை ஒருவர் கூறினார்.

சஹானா தொண்டு நிறுவனம் நடத்தும் பல்வேறு தங்குமிடங்களில் பெண்கள் உட்பட 110 பேர் உள்ளதாக சஹானாவின் இயக்குநர் விஸ்வ திலகரத்ன தெரிவித்தார்.

“நாங்கள் கடந்த வாரம் 20 பேரை தங்குமிடங்களுக்கு மாற்றினோம், இப்போது மேலும் 10 பேர் அதே பூங்காவில் தங்கியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, இந்த புதிய குழு குறித்து எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. நாங்கள் விரைவில் அவர்களுக்கு இடமளிப்போம். செப்டம்பர் 10 ஆம் திகதி இலங்கை செல்ல திட்டமிடப்பட்ட விமானத்தில் அவர்களை திருப்பி அனுப்புவோம்” என்றார்.

“எங்கள் ஆதரவாளர்களின் ஆதரவோடு நாங்கள் இந்த முகாம்களை இயக்குகிறோம். தற்போது, ​​நாங்கள் ஒரே நேரத்தில் மேலும் 100 பேருக்கு தங்கக்கூடிய தங்குமிட வீடுகளைத் தேடுகிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

“இலங்கைக்குத் திரும்புபவர்கள் பி.சி.ஆர் சோதனைக்குட்பட வேண்டும் மற்றும் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு பணம் செலுத்த வேண்டும். அதற்கு வசதியில்லாதவர்களிற்கு தொண்டு நிறுவனம் உதவியளிக்கிறது. சில நபர்கள் வீடு திரும்புவதற்கான முன்னுரிமையைப் பெறுவதற்காக தொடர்ந்து பூங்காவில் தங்க முயற்சிக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

பூங்காவில் தங்கியிருந்தவர்களை இலங்கை தூதரகம் பொறுப்பேற்று, சஹானா ஏற்பாடு செய்த முகாம்களுக்கு மாற்றுவதற்கு முன்னர், பூங்காவில் பல நாட்கள் கழித்தனர். அப்போது அவர்களிற்கு அந்த பகுதி மக்கள் உணவு, தண்ணீர், மெத்தை மற்றும் பிற அடிப்படை வசதிகளை வழங்கினர்.

இப்பகுதியில் வசிக்கும் இந்தியரான பிரக்யா ஷா, சிக்கித் தவிக்கும் நபர்களுக்கு சூடான உணவு, பிஸ்கட் மற்றும் பிற வசதிகளை வழங்கி வருகிறார். அவர் துபாயில் உள்ள மற்ற இலங்கையர்களை அணுகினார், அவர் இலங்கை நலச் சங்கத்துடன் தொடர்பு கொண்டார்.

“ஒரு கட்டத்தில் குறைந்தது 25 பேராவது இருந்தனர், அவர்கள் அனைவரும் வார இறுதியில் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டனர். இப்போது, ​​சிலர் உள்ளனர். நான் அவர்களுக்கு உணவு, சிற்றுண்டி மற்றும் பிற அடிப்படை வசதிகளை வழங்கி வருகிறேன். அவர்களுக்கு இடிப்படை சுகாதார வசதிகள் இல்லாததால் எனது கவலை அதிகரித்து வருகிறது” என்றார் ஷா.

இந்த ஆண்களும் பெண்களும் வெப்பத்தில் தூங்குவதைப் பார்ப்பது கடினமாக இருப்பதாக பிலிப்பைன்ஸை சேர்ந்த கைல் என்பவர் கூறினார்.

19,000 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட உள்ளனர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏராளமான இலங்கையர்கள் நாடு திரும்ப பதிவு செய்துள்ளனர். இவர்களில் பலருக்கு ரிக்கெட் கட்டணம், பி.சி.ஆர் சோதனை கட்டணம் செலுத்த முடியாது என்று துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதர் நலிந்த விஜேரத்ன கூறினார்.

“தற்போது, ​​19,000 பேர் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விமான டிக்கெட்டுகளை வாங்க முடியாத சுமார் 5,000 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களின் தேவைகளுக்கு பணம் செலுத்தினோம்”என்றார் விஜெரத்ன.