தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய மேலும் 12 பேர் கைது!

0

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை  கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 3 ஆயிரத்து 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்களில் 3 ஆயிரத்து 150 பேருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டங்களின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கொரோனா தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை தொடர்ந்தும் கடைபிடிக்குமாறும்  பிரதிப்  பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.