தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை!

0

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர்  திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சலுகை முறைமைகள் குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து உரிமையாளர்கள் பொது மக்கள் மீது சுமையினை ஏற்படுத்தாத வகையில் சலுகைகளை வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.