திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்படுகிறதா?

0

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பெரும்பாலும் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை முழுமையாக நீக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் போது உலகில் தற்பொழுது கொவிட் – 19 நோய்த் தொற்று பரவுகை தொடர்பில் பின்பற்றப்படும் வழிமுறைகளை நாமும் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் நோய்த் தொற்றுடன் வாழப் பழகிக் கொள்ளும் எண்ணக்கருவினை நாமும் பின்பற்ற வேண்டுமென பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.