திருகோணமலையின் மேலும் சில பகுதிகள் இன்று முடக்கம்

0

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இன்று காலை தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் சுமேதகம்புர, மூடோவி, கோவிலடி, லிங்கா நகர், காவட்டிகுடா மற்றும் சீன குடா பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.