திருவிழாக்கள், விசேட பூஜைகளை ஒத்திவைக்குமாறு வலியுறுத்து!

0

மக்களின் நன்மை கருதி ஆலயத் திருவிழாக்கள், விசேட பூஜைகள் அனைத்தையும் ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் ஆறு. திருமுருகனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் இருப்பிடங்களில் இருந்து வழிபடுமாறும் மருத்துவ சமூகத்தின் சொல்லுக்கு மதிப்பளிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆலயத்தில் அமைதியாக நடைபெறும் நித்திய பூசை தவிர்ந்த ஏனைய நிகழ்ச்சிகள் யாவற்றையும் ஒத்திவைத்து மக்களின் உயிரைக் காக்க ஒத்துழைக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, COVID 19 அசாதாரண சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு ஆலயங்களில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு சிவஶ்ரீ பால.ரவிசங்கர சிவாச்சாரியார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.