தேர்தல்கள் ஆணைக்குழுவில் சில முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக தகவல்!

0

தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல்கள் சில நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடாத்தப்பட்ட ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆராயப்படவுள்ளது.

மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு காலத்தினை நீடிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் எதிர்வரும் 30ஆம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதன்போது எட்டப்படவுள்ள தீர்மானங்களுக்கு அமையவே தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்றைய தினமும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.