நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அமுலாகும் முழுநேர பயணத்தடை!

0

நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து மீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்டதை போன்று இந்த நடமாட்ட கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேற முடியாது எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

இதேவேளை பயணத்தடை காரணமாக இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.