நாட்டின் அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றும் – சாணக்கியன் எச்சரிக்கை!

0

நாட்டின் அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உலகின் பல்வேறு நாடுகளுக்கு நுழைந்த சீனா, அந்தந்த நாடுகளிலுள்ள தொழிற்றுறைகளைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இலங்கைக்கு உள்ள அமைவிடத்தையே கைப்பற்றப் பார்க்கிறது.

மாகாண சபைகளுக்கூடாக அதிகாரங்களைப் பிரித்துக் கேட்கும் தமிழர்களை புலிகள் என்கிறார். இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்கிறார்கள்.

ஆனால், சீனாவுக்கு மாத்திரம் நாட்டுக்குள் இடத்தை வழங்கியுள்ளார்கள். அதனை சீழம் என்றே கூறவேண்டும்.

பொருளாதாரத்தில் நாட்டினுடைய அனைத்துப் பக்கங்களையும் சீனா கைப்பற்றும். ஸ்ரீலங்கா தற்போது சீலங்காவாக மாறப்போகிறது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.