நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றது ஒரு தொகை இன்சுலின் மருந்து!

0

ஒரு தொகை இன்சுலின் மருந்து நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.

நாளை(திங்கட்கிழமை) இந்த மருந்துகள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மருந்துகளையும் தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், வாராந்தம் இன்சுலின் வகைகளை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.