நாட்டை முடக்குவதே ஒரே ஒரு வழி – நிலைமையை ஆய்வு செய்த பின் இறுதி முடிவு

0

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நிலைமையை முழுமையாக ஆய்வு செய்து தேவைப்படும்போது பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வருகின்ற நிலையில் நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இது விவாதிக்கப்படும் ஒரு விடயம். நாட்டை முடக்குவதே ஒரே ஒரு வழி. எவ்வாறிருப்பினும் பல காரணிகளை ஆராய்ந்த பின்னரே என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் கோவிட் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடனான முடக்கம் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.