பயணத் தடையை நீக்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

0

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை ஜூன் 21ஆம் திகதி நீக்குவதாக எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது அல்ல என்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல ஜூன் 21ஆம் திகதி பயணத் தடையை நீக்குவது குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை என தெரிவித்தார்.

தடையை நீக்குவது குறித்து தற்போது கணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.