பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது – திலும் அமுனுகம

0

எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஒரு ரூபாவிலேனும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க போவதில்லையென்பதை தௌிவாக கூறுவதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதுவரை பொதுமக்களுக்கு இயலுமானவரை பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பயணத் தடை காரணமாக இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட போது, பஸ் கட்டணத்தில் 20 வீத திருத்தம் மேற்கொள்ளப்பட்டமையால் இந்த தடவை கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்தநிலையில், பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.