பிரதேச செயலாளர் அலுவலங்களுக்கு பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகள்

0

சுற்றாடலை பாதுகாப்பதற்காக பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு, 350 பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகளை இணைத்துக் கொள்ளவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது..

இந்த அபிவிருத்தி அதிகாரிகள் நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் அலுவலங்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கான முதலாவது குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டோருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

சுற்றாடல் அமைச்சில் இது தொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)