பிரியந்தவின் படுகொலையை நியாயப்படுத்தும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

0

பாகிஸ்தானின் சியல்கோட்டில் வன்முறைக் கும்பலால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான முகாமையாளர் பிரியந்த குமாரவின் படுகொலையைப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார்.

இளைஞர்களின் இத்தகைய செயல்கள் மோசமானவை அல்ல என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் டெய்லி இணையதளத்தின் ஆசிரியர் ஹம்சா அசார் சலாம், பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக்கின் அறிக்கையை மேற்கோள் காட்டி ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் மற்றுமொரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு அமைச்சர் இதனைத் தெரிவித்தார் என அவர் தனது விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.