பி.சி.ஆர்  பரிசோதனைகளை தவிர்ப்பவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என எச்சரிக்கை!

0

பி.சி.ஆர்  பரிசோதனைகளை தவிர்ப்பவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தும் சந்தர்ப்பங்களில் போலி தகவல்களை வழங்கும் நபர்கள் மற்றும் பரிசோதனைகளை தவிர்க்கும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர்கள் நாட்டிற்கு துரோகம் இழைக்கின்றவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மற்றுமொரு நபருக்கு வைரஸை பரப்பும் வகையில் செயற்பட்டவர் என கருதி, அவரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தும் சந்தர்ப்பங்களில் சிலர் போலியான தகவல்களை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண வலியுறுத்தியுள்ளார்.