புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது

0

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய புதிய கொவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி, மேற்கொள்ளப்படும் கலாசார, மத சடங்குகளை முடிந்தவரை குறைப்பது தொடர்பான நடைமுறைகள், புதுவருட விளையாட்டுக்களில் ஒவ்வொரு விளையாட்டின் போதும் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள், புத்தாண்டின் போது பாதுகாப்பான கடை வீதிப்பயணம் (Shopping) , பயணங்கள் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகள் இதில் தௌிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இம்முறை புதுவருட விளையாட்டுக்களை தவிர்க்குமாறும் வீடுகளில் உள்ளவர்கள் மாத்திரம் இணைந்து விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் தொடர்ந்தும் தொடர்பை பேணியவர்களுடன் மாத்திரம் குறித்த கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

அத்துடன் புத்தாண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அல்லது ஊடக நிறுவனங்கள் கொவிட்-19 தொற்று பரவாத வகையில் குறித்த வழிகாட்டல்களை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இந்த புத்தாண்டின் போது இசை நிகழ்ச்சிகளை நடத்துவது பொறுத்தமற்றதெனவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.