பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இந்த விடயத்தினை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் குறித்த வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடு அமுல்செய்யப்பட்டுள்ள காலப்பகுதியில் கிராம சேவகர் பிரிவொன்றில் தலா 2 வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.