மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 32 பேர் கைது!

0

மட்டக்களப்பில் ஊரடங்கை மீறியமை மற்றும் கசிப்பு, கஞ்சா, ஹரோயினுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், மட்டக்களப்பு, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, வாழைச்சேனை, வவுணதீவு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுகளில் கைதாகியுள்ளனர்.

ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய 21 பேர், கசிப்புடன் தொடர்புடைய 8 பேர், கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் 3 பேர் உட்பட 32 பேரை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

அந்தவகையில், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணிவரையிலான 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதியில் நடமாடியதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 4 பேர், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 8 பேர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் ஒருவர், வவுணதீவு பொலிஸ் பிரிவில் 8 பேர் உட்பட 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் 2 பேர், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 4 பேர், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 2 பேர் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டதுடன். காத்தான்குடியில் கஞ்சாவுடன் ஒருவரையும், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஹெரோயினுடன் ஒருவர் உட்பட 32 பேர் கைதாகியுள்ளனர்.

இதில் கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்களை அந்தந்த பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சிலரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.