மட்டக்களப்பில் புதிதாக 48பேருக்கு கொரோனா- இருவர் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

0

மட்டக்களப்பில் புதிதாக 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இரு மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் பயணத்தடை காரணமாக குறித்த பகுதி மூன்று நாட்களாக முற்றாக முடங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த  கடந்த 24 மணி நேரத்தில் 48பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.