மட்டக்களப்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவி!

0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள முடக்க நிலையை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் வேண்டுகோளில் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இம்மாவட்டத்தில் மண்முனைப் பற்று, காத்தான்குடி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தினக் கூலி தொழிலாளர்களை்க கொண்ட 100 குடும்பங்களுக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை இலங்கை தேசிய சமாதானப் பேரவை வழங்கியுள்ளது.

இந்த அன்பளிப்பு உணவுப் பொதி விநியோகம் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் என். சத்தியானந்தி தலைமையில் ஆரையம்பதி கிழக்கு செல்வா நகர் பகுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்கா அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அடிகளார் போல் சற்குணநாயகம் தலைமையிலான குழுவினர் உடனிருந்தனர்.