மட்டு.கல்லடி பாலத்திலிருந்து தற்கொலைக்கு முயன்றவர் காப்பாற்றப்பட்டார்!

0

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் மேல் இருந்து தற்கொலை செய்ய வாவியில் குதித்து இளைஞர் ஒருவரை வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் காப்பாற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுதாவளை 4ஆம் ஸ்ரீமுத்துமாரியமன் கோவில் வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பாலத்தின் அருகில் இளைஞர் கொண்டுவந்த பை மற்றும் செருப்பு என்பவற்றை கழற்றிவைத்துவிட்டு பாலத்தின் மேல் இருந்து சம்பவதினமான நேற்று வாவியில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்வதற்காக வாவியில் குதித்துள்ளார்.

இதன்போது, குறித்த பகுதியில் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக வாவியில் குதித்து இளைஞரை காப்பாறி கரைசேர்ததுடன், உடனடியாக மட்டு.போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர்.

இதுதொடர்பான விசாணைகளை   காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.