மருதமுனையில் போனி குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

0

மருதமுனை- துறைநீலாவணை எல்லை பகுதியில் போனி குதிரைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் திரிவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை- கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட மருதமுனை துறைநீலாவணை எல்லை பகுதியில் அதிகமான போனி குதிரைகள் காணப்படுகின்றது.

குறித்த போனி குதிரைகள் அப்பகுதியில் ஒன்றோடு ஒன்று சண்டை பிடிப்பதோடு அதிவேகமாக ஓடுகின்றது.

இந்த குதிரைகள், வீதிகளில் நடமாடுவதனால் பாதசாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகுவதோடு விபத்துக்களும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.