மாகாணங்களுக்கு இடையில் கடுமையாக்கப்படும் நடைமுறை!

0

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் முழுமையாக இடைநிறுத்தப்படுகின்றது.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி அட்டையின்றி, பொது இடங்களுக்கு பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.