மாகாண சபைத் தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று?

0

இன்று(திங்கட்கிழமை) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான சட்ட திருத்தம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைச்சர் ஜனக பண்டாரா தென்னக்கோன் கடந்த வாரம் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக அமைச்சரவையில் இரண்டு மாற்று திட்டங்களை முன்வைத்தார்.

அந்த முன்மொழிவுகளில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய புதிய சட்டத்தை இரத்து செய்தல் மற்றும் பழைய முறைக்கு தேர்தல்களை நடத்துதல், புதிய சட்டத்தின் திருத்தம் மற்றும் கலப்பு முறையின் கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்துதல் ஆகியவை அடங்கும்.