முடக்கப்பட்டது கிரேன்பாஸ் நாகலகம் பகுதி!

0

கிரேன்பாஸ் நாகலகம் பகுதி இன்று(வியாழக்கிழமை) முதல் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

கிரேன்பாஸ் நாகலகம் பகுதியில், கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிக்குப் பிரவேசிக்கும் வீதியும் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

ஜா-எல சுதுவெல்ல பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய, கொழும்பு-குணசிங்கபுர, வேல்லவீதி, கிரேன்பாஸ் மற்றும் நாகலகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 பேர் நேற்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.