மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…!

0

மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த 05 பேரும் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் (நேற்று முன்தினம்) 24, நேற்று 33, இன்று இதுவரை 05) 61 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.