முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பகுதியில் வைத்து ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஈஸ்ரர் தினமான ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாகவே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.