வடமாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்?

0

வடமாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராகவும் ஜீவன் தியாகராஜா பணியாற்றி வருகின்ற நிலையில் ஜனாதிபதியினால்  குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய அவர் தற்போது வகிக்கும் பதவியை இராஜினாமா செய்து வட மாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.