வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் !

0

கொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்த நடைமுறையும் முன்னெடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சில நிறுவனங்கள் இதுபோன்ற பதிவு நடைமுறைகளைத் தொடங்கியுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், இருப்பினும் அவை குறித்து அந்த நிறுவனங்கள் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கை ஆரோக்கியமானவை அல்ல என குறிப்பிட்ட வைத்தியர் ஹேமந்த ஹேரத், தடுப்பூசி செலுத்தும் சுகாதார ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆகவே தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பொதுமக்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி ஆகியோரை மட்டுமே நம்புமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.