வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம் – குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க தடை

0

வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்த ஒருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் வவுனியா ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்து சென்றுள்ளார். இந்த நிலையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தோணிக்கல் ஆலடிப்பகுதியில் புகையிரத கடவைக்கு அருகாமையில் சிறிய கடையொன்றினை நடத்தி வரும் குடும்பமொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையும் இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.