வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு இறுதி சந்தர்ப்பம்!

0

வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை(செவ்வாய்கிழமை) மற்றும் நாளைமறுதினம் அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தியதன் பின்னர்  வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, சுமார் நான்கரை இலட்சம் வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்களில் தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.