விளமக்கமறியலில் வைக்கப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க!

0

கைதுசெய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளமக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸாரின் கடமைக்ளுக்கு இடையூறு விளைவித்ததாக ரஞ்சன் ராமநாயக்க நேற்று கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்தியபோதே விளக்கமறிய்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, ஊரடங்கு உத்தரவினை மீறிய ஒருவருக்கு ஆதரவாகச் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சிகிச்சையாளர் ஒருவர் மாதிவெலையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புத் தொகுதிக்குள் கெப் ரக வாகனம் ஒன்றில் பிரவேசித்துள்ளார். குறித்த நபரிடம் பொலிஸார் ஊரடங்கு அனுமதிப் பத்திரத்தினைப் காண்பிக்குமாறு கோரியுள்ளனர்.

இதையடுத்து குறித்த நபர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு அறிவித்துள்ளார். சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த ரஞ்சன், பொலிஸாரை நிந்தித்து அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.