ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி

0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுமார் மூன்று மாத காலமாக ஹோட்டல்களில் இடம்பெறாமல் இருந்த திருமண நிகழ்வுகளை இன்று முதல் நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குள் 1.5 மீற்றர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.