24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 815 பேர் கைது!

0

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 815 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் 595 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை ஆறு மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 17 ஆயிரத்து 717 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் 4 ஆயிரத்து 586 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.