600 இற்கும் அதிகமான கர்ப்பிணிகளுக்கு கொரோனா

0

நாட்டில் 600ற்கும் அதிகமான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்தியர் டொக்டர் மதுரம்மான தேவோலகே தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கர்ப்பிணித் தாய்மார் இந்த வைரஸிடமிருந்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாதாந்த பரிசோதனைகளுக்கு செல்வது தொடர்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அச்சம் காணப்படுகின்ற போதிலும், கட்டாயம் பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கும், கொவிட் தொற்று ஏற்படாதவர்களுக்கும் இடையில் தொடர்புகளை பேணாத வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்தியர் டொக்டர் மதுரம்மான தேவோலகே தெரிவிக்கின்றார்.