மட்டக்களப்பில் மேலுமொரு கொரோனா மரணம்

0

மட்டக்களப்பில் இன்றும் (30) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கன்னன்குடாவைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 34ஆம் விடுதியில் தங்கிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.

இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் ஆறாவது மரணமாகவும் பதிவாகியுள்ளது.