எம்.பிக்கள் 146 பேர் மாத்திரமே தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர்

0

தகவல் அறியும் சட்டமூலம் ஊடான அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 146 பேர் மாத்திரமே கொவிட்19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக்கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

அன்றுமுதல், ஓகஸ்ட் 12ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 146 பேர் மாத்திரமே கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலுள்ள சுகாதார நிலையத்தில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ள னர்.

எனினும், ‘அமெரிக்காவின் மொடர்னா மற்றும் பைஸர், சீனாவின் சினோபார்ம் மற்றும் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட எஸ்ட்ராசெனிகா ஆகிய தடுப்பூசிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கள் பெற்றுக்கொண்டமைக்கான எந்தத் தகவலு மில்லை” என நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகமும் தகவல் அதிகாரியுமான டிகிரி கே. ஜயதிலக்க தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட் – 19இற்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் தம்மிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசியேற்றல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி வழங்கப்பட்ட பதிலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விவசாய அமைச்சர் மஹிந்தா னந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திலீப் வெதஆராச்சி ஆகிய ஐந்து பேரும் கடந்த 14 நாட்களுக்குள் கொவிட் – 19 தொற்றுக் குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.