மட்டக்களப்பில் ஊரடங்கை மீறி வீதிகளில் நடமாடிய 12 பேர் கைது!

0
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள  பிரதேசங்களில் ஊரங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 12 பேரை நேற்று புதன்கிழமை   கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்
இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நேற்று (புதன்கிழமை) மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் வீதிரோந்து நடவடிக்கையின் போது ஊரங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய  12 பேரை கைது செய்தனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களை வரவழைத்து எதிர்வரும்  மே மாதம் 13 ம் திகதி  நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்