கிழக்குப் பல்கலைக்கழக  2018/2019  மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

0

கிழக்குப் பல்கலைக்கழக  2018/2019  மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி ஜெ.கென்னடியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட 2018/2019 கல்வியாண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2020.10.12ம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக  2018/2019  மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது.

இவர்களது கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் தொடர்பான மீள் அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.