அமெரிக்க பொலிஸ் காவலில் உயிரிழந்த ஆபிரிக்க அமெரிக்கரான George Floyd இன் மரணம் கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் குறித்த மரணம் கொலை என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக George Floyd மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக பொலிஸாரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் George Floyd கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி ஒருவர் George Floyd இன் கழுத்தில் மண்டியிட்டு நெரிக்கும் காணொளி ஒன்று அண்மையில் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா முழுவதும் தொடர்ச்சியாக கடந்த ஆறு நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.