LPL இல் தொடரில் பங்கேற்ற தமிழ் பேசும் வீரர்கள் கெளரவிப்பு!

0

வடக்கு மாகாணத்தைப் பிரதிநித்துவப்படுத்தி, லங்கா பிரிமியர் லீக் தொடரில் கலந்து கொண்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, தனியார் நிறுவனமொன்றின் ஏற்பாட்டில், அரியாலையிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி, வாகனத் தொடரணி மூலம் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்ட வீரர்கள், மேள வாத்தியங்களுடன் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது, LPL தொடரில் கலந்து கொண்ட வியாஸ்காந்த், கபில்ராஜ், டினோசன் , விஜேராஜ் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட ரதீபன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.