O/L மீள் திருத்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

0

2019-ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணங்களை விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.