ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் இன்னும் கோவிட் பரவுவதற்கான அதிக ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, மேல் மாகாணத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை விரைவுபடுத்த சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், வைத்தியசாலைகளில் நிறுவப்பட்ட மையங்களில் தடுப்பூசியை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையில், நாட்டில் அமுலில் இருந்த பயண தடைகளை நீக்கி ஐந்து நாட்கள் கடந்துவிட்டன. இத்தகைய பின்னணியில், கடந்த 7 நாட்களில் அதிக தொற்றுநோய்கள் பதிவாகியுள்ள மாவட்டங்களின் நிலைமையை ஒப்பீட்டளவில் ஆய்வு செய்தோம்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் தினசரி தொற்றுநோய்களின் எண்ணிக்கை 175 முதல் 400 வரை இருந்தது.
கம்பஹா மாவட்டத்தில் தினசரி தொற்றுநோய்களின் எண்ணிக்கை 175 முதல் 450 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 175 முதல் 400 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.