கொரோனா தொற்றுக்குள்ளாகும் அரச ஊழியர்களுக்கு நட்டஈடு – உயிரிழந்தால் 7 இலட்சம் ரூபா இழப்பீடு!

0

கொரோனா தொற்றுக்குள்ளாகும் அரச ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அரச பணியாளர்களின் செலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் வீதம் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

குறித்த தொகையானது அதிகபட்சமாக 10 நாட்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக உயிரிழக்கும் அரச பணியாளர்களுக்கு 7 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.