கொரோனா அச்சுறுத்தல் – தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

0

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களிலுள்ள 51 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 18 பிரதேசங்களும், கம்பஹா மாவட்டத்தில் 11 பிரதேசங்களும், களுத்துறை மாவட்டத்தில் 7 பிரதேசங்களுமான மேல் மாகாணத்தில் 35 பிரதேசங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் 4 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், புத்தளம் மாவட்டத்தில் 5 பிரதேசங்களும், அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிரதேசமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.