மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை பூர்த்திசெய்ய நடவடிக்கை!

0

இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தின்  தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய பிரதேச செயலக மட்டங்களில் இளைஞர் அமைப்புக்கள் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றனர்.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது இரத்ததான முகாம் மண்முனை வடக்கு பிரதேசத்தில் கறித்தாஸ் எகெட் சர்வமத இளைஞர் கழகத்தின் அனுசரணை ஒருங்கிணைப்பில் 5வது இளைஞர் நாடாளுமன்றம்,  ஹெல்ப் எவர் அமைப்பு,  மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் இயற்கையின் மொழி ஆகிய அமைப்புக்களின் ஒருமித்த ஏற்பாட்டில் சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை பூர்த்திசெய்யும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினால் இரத்தானமுகாம் நடாத்தப்பட்டது.

இதன்போது இரத்தக் கொடையாளர்களுக்கு இயற்கையின் மொழி அமைப்பினரால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.