முஸ்லிம் பிரேத பரிசோதனை அதிகாரி பதவியை உருவாக்கும் எண்ணம் இல்லை – அலி சப்ரி

0

முஸ்லிம் பிரேத பரிசோதனை அதிகாரி பதவி ஒன்றை உருவாக்கும் எண்ணம் இல்லை என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் சில குழுக்கள், பிரேத பரிசோதனை அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் பிழையான செய்திகளை பரப்பி வருகின்றன.

எனினும் அவ்வாறு முஸ்லிம்களை மையப்படுத்தி புதிய பதவி உருவாக்கப்படும் எண்ணம் இல்லை.

மாறாக நடைமுறைக்கு அப்பால் வெற்றிடங்கள் நிரப்பப்படாது என்றும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.